திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்மை மிகவும் ஆச்சர்யபடவைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் கொண்ட ஒரு நம்பிக்கைக்காக எவ்வளவு தூரம் போராடியது என்பதனை ஆசிரியர் மிகவும் ஆழ்ந்து விவரித்துள்ளார். இந்நூல் முதல் இரண்டு பாகங்கள் திருவரங்கன் உலா என்றும், மூன்று மற்றும் நான்காவது பாகங்கள் உப தலைப்பாக மதுராவிஜயம் என்று ஆசிரியர் பெயரிட்டுள்ளார்.