ஆழிசேர் உலகைப் படைத்து அருள் பாலிப்பவன் ஆண்டவனான எம்பெருமான். அவனது அரவிந்தத் திருக்கரங்களிலே ஐந்து படைக்கலக் கருவிகள். அவற்றுள் சிறப்பாகச் சொல்லப்படுவது - சீர்மிகு திருவாழி ஆழ்வான் சக்கரத்து ஆழ்வான் என்றும் ஸ்ரீமஹா ஸுதர்சனர். இவர் இறைவனுக்கு அந்தரங்க ஆள் மட்டுமல்ல. நமக்கு நல்லனவெல்லாம் நாளுமே தந்து நம்மை ஆட்கொள்ள வந்தவர்.
ஆண்டவனது உத்ஸவ காலத்தில் முதன் முதலில் இந்த ஆழ்வானாம் ஸ்ரீ ஸுதர்சனருக்குத்தான் தீர்த்தவாரி என்று அழைக்கப்படும் திருமஞ்சனம் செய்விப்பது வழக்கம் - இன்றும் காணலாம். அப்படி எம்பெருமானே இவருக்குச் சிறப்பை அளித்திருக்கிறார் என்றால் இவரது மஹிமை - பெருமை பற்றி விளக்கவா வேண்டும்.
ஸ்ரீ மஹா ஸுதர்ஸன ஹோம விதானம்
- Brand: எஸ்.ஸீந்தர சாஸ்திரிகள்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100