சொந்த வாழ்வில் நேர்ந்த துயரம் காரணமாக மனோநிலையே பாதிப்புற்றிருந்த ஒரு அராபிய அரசனுக்கு அவனது அமைச்சரின் புத்திக்கூர்மை மிகுந்த பெண்ணால் கூறப்பட்ட கதைகளே இந்த அராபிய இரவுகள். ஒவ்வொரு நாளும் இரவிலேயே இக்கதைகள் அவ்வரசனுக்குக் கூறப்பட்டதால் அராபிய இரவுகள் எனப் பெயர் பெற்றது.

